About Us
வரலாற்றுக் கண்ணோட்டம்
வரணியம் பதியிலே இடைக்குறிச்சி (J/341) கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பாரம்பரியபெருமைகள்கொண்ட பாடசாலையாக யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம் விளங்குகின்றது. குரு குலக் கல்வி முறையில் செயற்படத் தொடங்கிய இப் பாடசாலையை ஆரம்பித்து வைத்த பெருமை இவ்வூர்க் கிராமசேவகர் திரு.சி.அம்பலவாணர் அவர்களையே சாரும்.
1928 ல் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையின் முதலாவது அதிபராக திரு.ஜ.முருகேசு அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். பாடசாலை அமைந்துள்ள நிலத்தை மனமுவந்து வழங்கி திரு.வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்களும் திரு.தம்பு பாலசுப்பிரமணியம் அவர்களும் தமக்கே பெருமை சேர்த்துக்கொண்டனர்.
ஆகியோர் இதுவரை காலம் பணியாற்றியுள்ளமை சிறப்புக்குரியது.
பாடசாலையின் தனித்துவத்தை பேணும் வகையில் கீதம், கொடி, இலச்சினை என்பன அமைந்துள்ளன. “வாழ்க வாழ்க வாழ்கவே…..” என்று தொடங்கும் இக்கீதம் கல்வியும் ஒழுக்கமும் பெற்று புகழுடன் வாழ்தலைக் வலியுறுத்தி நிற்கின்றது. நாவல், பச்சை வண்ணங்களைக் கொண்டதாக பாடசாலையின் கொடி மிளிர்கின்றது. பாடசாலையின் இலட்சனையின் மகுட வாசகம் “உண்மை, அறிவு, நேர்மை” என்றவாறாக அமைக்கப்பட்டு அறிவுடன் பண்பையும் வலியுறுத்திக் கொள்கிறது. அத்துடன் பனை, நெற்கதிர், விளக்கு ,புத்தகம் என்பன காணப்படுகின்றன. ஊரின்வளத்தை பனை, நெற்கதிர் குறித்து நிற்பதோடு கற்பதன் முலம் விளக்குப் போல ஒளிகிடைக்கும் என்பதையும் ஏனையவை சுட்டிநிற்கின்றன.
1961 இல் அரச பாடசாலையாக இது மாற்றப்பட்டுள்ளது அருகே ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகனது நாமத்தை தாங்கிப்பாடசாலை அமைந்துள்ளமை சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
Our Mission
Developing the Social A wareness improving Teacher’s proficiency and promoting morais and competency level of Students
Our Vision
Creating Students Society With the competencyof living in the World facing the challengestoday
Top Rankers
Shara Kumaralinkam
Result
Island Rank
District Rank
District Rank
Top performer in exams consistently exhibit disciplined study habits, strong time management skills, and a growth mindset. They approach challenges with enthusiasm, embrace failure as an opportunity to learn, and prioritize their academic goals.
பணிக்கூற்று
ஆசிரியரின் வாண்மை விருத்தியை அதிகரித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களின் நற்பண்பு, வினைத்திறகன் மட்டத்தை மேம்படுத்தல்.
மகுட வாசகம்
உண்மை அறிவு நேர்மை
நோக்கக் கூற்று
இன்றைய உலகின் சவால்களுக்கு முகங்கொடுத்து வாழக்கூடிய மாணவர் சமுதாயத்தை உருவாக்கல்.